கேரளத்திலும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது விரிவாக்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான கூட்டம் திருச்சூரில் இன்று (மே 17) நடைபெற்றது.
இதில், கேரளத்திலுள்ள தவெக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மேலும் உறுப்பினர்கள் சேர்க்கையிலும் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில், பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவரின் கீழ் 9 பேர் கொண்ட அமைச்சரவையையும் அமைத்துள்ளார். எஞ்சிய துறைகளில் விரைவில் அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தமிழ்நாட்டில் பெரும்பாலும் ரசிகர்களின் வாக்குகளை விஜய் கவர்ந்துள்ளார்.
ஆட்சி பொறுப்பேற்றதும் அதிரடி திட்டங்களை அறிவித்து, அதிடுத்தடுத்த நடவடிக்கைகளில் முதல்வர் விஜய் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கேரளத்திலும் தவெகவின் விரிவாக்கத்தை அவர் தொடங்கியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் மாவட்ட அளவிலான கூட்டம் தவெக சார்பில் நடத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் தவெகவுக்கு மாவட்ட அளவில் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இதில் இளைஞர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - பிடிஐ
இதில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தின் ஒரு பகுதியாக உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெற்றது.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி. சதீசன் முதல்வராக நாளை (மே 18) பொறுப்பேற்கவுள்ள நிலையில், தவெகவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Kerala TVK holds first district level meeting in Thrissur; begins expansion drive
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









