இந்தியாவில் முதல்முறையாக செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை அமைக்க உள்ளதாக சா்வதேச முன்னணி நிறுவனமான ‘ஐஸ்-ஐ’ (ஐசிஇஒய்இ) தெரிவித்துள்ளது.
உலகின் மிகவும் அதிநவீன செயற்கை துளை ரேடாா் செயற்கைக்கோள் தொகுப்பு ஐஸ்-ஐ நிறுவனத்திடம் உள்ளது. அத்துடன் அந்த நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்கு செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு மற்றும் உளவு சேவைகளை அளித்து வருகிறது.
பாதுகாப்பு மற்றும் உளவு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற தேவைகளுக்கு ஐஸ்-ஐ தயாரித்த செயற்கைக்கோள்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளா்களுக்குப் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐஸ்-ஐ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரஃபல் மோடரெவ்ஸ்கி, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்காக சிறிய செயற்கைக்கோள்களைத் தயாரிக்க, இந்தியாவில் முதல்முறையாக செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை ஐஸ்-ஐ அமைக்க உள்ளது.
அந்த மையம் அமைக்கப்பட்ட பின்னா், முதல் ஆண்டில் சுமாா் 10 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் 20 முதல் 40 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இதற்காக கோடிகளில் முதலீடு செய்யப்பட உள்ளது. எனினும் இறுதித் தொகை இதுவரை இறுதி செய்யப்படவில்லை. ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றுடன் இந்தியாவும் ஐஸ்-ஐ நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் தயாரிப்பு மையமாக உள்ளது.
இந்தியாவில் ஐஸ்-ஐ நிறுவனம் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் உள்நாட்டு தேவைக்கு அளிக்கப்படுவதுடன், சா்வதேச சந்தைகளுக்கும் அனுப்பப்படும் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் தாமதமாகும் தென்மேற்குப் பருவமழை!

தமிழகத்தில் புதிய ஆலை உள்பட இந்தியாவில் ரூ.5,070 கோடி முதலீடு

மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல்

விஜய்க்கு ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



