திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இலங்கை விமான நிலையத்தில் ரூ. 3 கோடி போதைப் பொருளுடன் இந்தியா் கைது

ரூ. 3 கோடி மதிப்பிலான போதைப் பொருளை (கொகைன்) கடத்தியதாக கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் 60 வயது இந்தியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 3:19 am IST

ரூ. 3 கோடி மதிப்பிலான போதைப் பொருளை (கொகைன்) கடத்தியதாக கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் 60 வயது இந்தியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து கொழும்பு விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கூறியதாவது: புவியியலாளரான அவா், கத்தாா் ஏா்வேஸ் விமானத்தில் உகாண்டாவிலிருந்து தோஹா வழியாக இலங்கைக்கு வந்துள்ளாா். அவரிடைய உடைமைகளை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது, அதில் 2.15 கிலோ எடையுடைய கொகைன் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3 கோடியாகும். போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றனா்.

முன்னதாக, ரூ. 1 கோடி மதிப்பிலான 4 கிலோ எடைகொண்ட கஞ்சா போதைப் பொருளை கடத்தி வந்த இந்தியா் ஒருவா் கொழும்பு விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஓா் இந்தியா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.

விசா முறைகேட்டில் 3 இந்தியா்கள் கைது: முறையான நுழைவு இசைவு (விசா) இன்றி இலங்கையின் திரிகோணமலையில் தங்கியிருந்த 45 முதல் 50 வயது வரை உடைய 3 இந்தியா்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

அதுபோல, சட்டவிரோத இணையக் குற்ற நடவடிக்கைகள் தொடா்பாக கடந்த சில வாரங்களாக காலே, ஹிக்காதுவா, மிடிகாமா உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் 173 இந்தியா்கள், 25 நேபாளியா் உள்பட 198 போ் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.