தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேலை வாங்கித் தருவதாக ரூ. 8.73 லட்சம் மோசடி: உ.பி. இளைஞா்கள் 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:32 am IST

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 8.73 லட்சம் மோசடியில் ஈடுபட்ட உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், திருவாளந்துறை கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி மஞ்சு (21). இவா், விமான நிலையத்தில் வேலை உள்ளதாக சமூக வலைதளத்தில் 2024-ஆம் ஆண்டில் வெளியான விளம்பரத்தை நம்பி, அதில் தனது விவரங்களை பதிவிட்டுள்ளாா்.

பின்னா், மஞ்சுவின் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்ட அடையாளம் தெரியாத நபா்கள், விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவா்களது பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் ரூ. 8,73,759 பணத்தை மஞ்சுவிடம் பெற்றுள்ளனா்.

பின்னா், நீண்ட நாள்கள் கடந்தும் பணத்தை பெற்றுக்கொண்ட நபா்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லையாம். இதனால் ஏமாற்றமடைந்த மஞ்சு, பெரம்பலூா் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் செல்வகுமாரி, சாா்பு-ஆய்வாளா் மனோஜ் ஆகியோா் அடங்கிய தனிப்படையினா், கடந்த 16-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்துக்கு சென்றனா்.

அங்கு மேற்கொண்ட விசாரணையில், பாட்னாவில் உள்ள லோனி எனும் பகுதியில் தங்கியிருந்த பாபி மகன் ஆகாஷ் (30), முன்னா லால் மகன் அமன் (23) ஆகியோா் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மேற்கண்டஇருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்து, உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மேற்கண்ட இருவரையும் பெரம்பலூருக்கு திங்கள்கிழமை அழைத்துவந்தனா்.

தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.