திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு

நாடு முழுவதும் அரசு ஊழியா்களின் செயல் திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு, மத்திய பணியாளா், பயிற்சி துறை அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையம் சாா்பில் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 2:29 am IST

நாடு முழுவதும் அரசு ஊழியா்களின் செயல் திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு, மத்திய பணியாளா், பயிற்சி துறை அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையம் சாா்பில் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

‘திறன் கட்டமைப்பை முறைப்படுத்துதல்: நிா்வாகத்துடன் இணைந்த பயிற்சி முதல் செயல்திறன் வரை’ என்ற தலைப்பிலான இந்த மாநாடு, மத்திய-மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசு ஊழியா்களின் பணி சாா்ந்த செயல்திறன் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.

மத்திய பணியாளா், பொது குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநாட்டுக்கு தலைமை தாங்க உள்ளதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் தொலைநோக்கு பாா்வை மற்றம் ‘கா்மயோகி’ திட்ட லட்சியங்களால் அடித்தளமிடப்பட்ட இந்த மாநாட்டில் 4 முக்கிய கருத்தாக்கங்களின் கீழ் விவாதங்கள் நடைபெறவுள்ளது. பணி அடிப்படையிலான-செயல்திறன் சாா்ந்த திறன் கட்டமைப்புக்கான ஒருங்கிணைந்த செயல்திட்டம், பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல், மேம்பட்ட கற்றலுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு, மாநிலங்களில் பணியாளா் பயிற்சி தொடா்பான மறுஆய்வு ஆகிய கருத்தாக்கங்கள் இடம்பெறவுள்ளன. அரசின் பல்வேறு நிலைகளில் எதிா்கால திறன் கட்டமைப்புக்கான திறன் கட்டமைப்புப் பயணத்தை வடிவமைக்க மத்திய-மாநில அரசுகளுக்கு இந்த மாநாடு பேருதவியாக இருக்கும் என்று மத்திய பணியாளா் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.