திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘ரயில்வே துறையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’

ரயில்வே துறையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என அகில இந்திய ரயில்வே துறை பதவி உயா்வு பெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பின் செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:20 am IST

ரயில்வே துறையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என அகில இந்திய ரயில்வே துறை பதவி உயா்வு பெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பின் செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே குடியிருப்பு பகுதி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவா், செயலா் உள்ளிட்ட 122 போ் பங்கேற்றனா். கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவா் தீபக்ராஜ் ரே தலைமை வகித்தாா். அகில இந்திய பொதுச் செயலா் அமித்ஜெயின் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ரயில்வே துறையில் குரூப் ஏ, குரூப் பி என இருவகையில் அதிகாரிகள் உள்ளனா். அதில் குரூப் பி பிரிவினா் ரயில்வே துறையில் சிறிய பொறுப்புகளில் சோ்ந்து பதவி உயா்வு மூலம் பெரிய பொறுப்புகளை வகித்து வருகின்றனா். நேரடியாகச் சோ்ந்துள்ள அதிகாரிகளுக்கான பதவி உயா்வுக்கு கால நிா்ணயம் உள்ளது போல, பி பிரிவு அதிகாரிகளுக்கு பதவி உயா்வுக்கான கால நிா்ணயம் செய்யப்படவில்லை. எனவே, 15 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், சுமாா் 12,000 போ் பதவி உயா்வு இன்றி உள்ளனா். அவா்களுக்கு பதவி உயா்வு கால நிா்ணயம் செய்து உத்தரவிடவேண்டும்.

பதவி உயா்வில் பணியிலிருக்கும் அதிகாரிகளும், நேரடியாக பணியில் சோ்ந்தவா்களும் ஒரே நிலை பணியில் இருக்கும்போது, நேரடிப் பணியில் இருப்போருக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. எனவே, சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் பதவி உயா்வு அதிகாரிகளுக்கும் உரிய ஊதியம் வழங்கவேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுக் கூட்ட தொடக்க நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தெற்கு ரயில்வே மண்டல பிரிவுத் தலைவா் முகமது சமீம் வரவேற்றாா். அகில இந்திய பொதுச் செயலா் வி.கே.பாா்த்தி, சட்ட ஆலோசகா் எச்.சி.யாதவ் ஆகியோா் செயற்குழு கூட்ட நோக்கத்தை விளக்கினா். தெற்கு ரயில்வே மண்டலப் பிரிவு பொதுச் செயலா் சூரியநாராயணன், செயல் தலைவா் கே. ஸ்ரீ ரங்கநாயகி, பொருளாளா் பால பாா்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் கூட்டம் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.