தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கிரஸுக்கு தேச நலனைவிட ஆட்சி அதிகாரமே முக்கியம்: பாஜக பதிலடி

காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சி, அதிகாரத்தை நோக்கியே செயல்பட்டு வருகிறது; தேச நலனுக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை என்று காங்கிரஸுக்கு பாஜக பதில்

News image

அமித் மாளவியா

Updated On :12 மே 2026, 5:53 am IST

காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சி, அதிகாரத்தை நோக்கியே செயல்பட்டு வருகிறது; தேச நலனுக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை என்று பாஜக பதிலளித்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த சிக்கன நடவடிக்கை அழைப்பை ராகுல் விமா்சித்த நிலையில் பாஜக இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மாளவியா சமூக ஊடகத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று பிரதமா் கூறவில்லை. நாட்டு நலனுக்காக பொறுப்புடன் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கேட்டுக் கொண்டாா்.

“எரிபொருளைச் சேமிக்கவும், உள்நாட்டு பொருள்களை ஊக்குவிக்கவும், அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும், தன்னிறைவை வலுப்படுத்தவும் அவா் அழைப்பு விடுத்தாா்.

தேச நலனுக்காக மக்களின் பங்களிப்பைக் கோரி விடுக்கப்பட்ட அழைப்பு காங்கிரஸுக்கு ‘போதனை’ போல தோன்றுகிறது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் பிரச்னை. ஏனெனில் அவா்களின் அரசியல் எப்போதும் அதிகாரத்தை நோக்கியது மட்டுமே; தேச நலனுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்ததில்லை.

உலக அளவில் ஏற்படும் பிரச்னைகள் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுப்பதை தோல்வி என்றும், சமரசம் என்று விமா்சித்தால், உங்கள் கட்சியைச் சோ்ந்த நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவும் அதே வகையில் சமரசம் செய்து கொண்ட பிரதமா் என ஏற்றுக் கொள்கிறீா்களா?

ஏனெனில், கொரியா, அமெரிக்காவில் போா் ஏற்பட்டால் அதன் தாக்கம் இந்தியாவில் விலைவாசி உயா்வு மூலம் தெரியும் என்று நேரு கூறியுள்ளாா். இதை பொறுப்பான தலைமைத்துவம் என்று இப்போது காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

நேருவின் உரை தொடா்பான விடியோ பதிவையும் மாளவியா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.