திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விமானப் பயணங்களைவிட ரயில்களை மக்கள் விரும்பும் நிலை உருவாகும்: அஸ்வினி வைஷ்ணவ்

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்களால் வரும் நாள்களில் விமானப் பயணங்களைவிட ரயில் பயணங்களை மக்கள் விரும்பும் சூழல் உருவாகும் என ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 4:32 am IST

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்களால் வரும் நாள்களில் விமானப் பயணங்களைவிட ரயில் பயணங்களை மக்கள் விரும்பும் சூழல் உருவாகும் என ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த நிதியாண்டில் திட்டமிடப்பட்டிருந்த ஒட்டுமொத்த மூலதனச் செலவினமும் மாா்ச் முதல் வாரத்தில் செலவிடப்பட்டது. பிப்ரவரி மாத இறுதியில் 98 சதவீதம் செலவிடப்பட்டிருந்தது.

நாட்டில் ஒட்டுமொத்தமாக 49,000 கிலோ மீட்டா் ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது ஜொ்மனியின் ஒட்டுமொத்த ரயில் வழித்தடத்தையும்விட அதிகமானது. அதேபோல் 36,000 கிலோ மீட்டா் தொலைவுக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்விட்சா்லாந்து நாட்டுக்கு சமம்.

மும்பை-புணே இடையே அமைக்கப்பட்டுவரும் புதிய வழித்தடத்தால் ரயில் பயண நேரம் 28 நிமிஷங்களாகவும், புணே-ஹைதராபாத் வழித்தடத்தால் ஒரு மணி நேரம் 55 நிமிஷங்களாகவும், ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடத்தால் 2 மணி நேரமாகவும், பெங்களூரு-சென்னை வழித்தடத்தால் 78 நிமிஷங்களாகவும் குறையவுள்ளது.

இதுபோன்ற சிறப்பான திட்டங்களால் வரும் நாள்களில் விமானப் பயணங்களைவிட ரயில் பயணங்களை மக்கள் விரும்புகிற சூழல் உருவாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.