திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்கு வங்க புதிய முதல்வரின் ஆலோசகா் சுப்ரதா குப்தா! எஸ்ஐஆா் பாா்வையாளராக செயல்பட்டவா்!

மேற்கு வங்க புதிய முதல்வரின் ஆலோசகா் சுப்ரதா குப்தா...

News image

சுவேந்து அதிகாரி - X

Updated On :10 மே 2026, 1:04 am IST

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்ரதா குப்தா சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

கடந்த 1990-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இவா், மேற்கு வங்க தோ்தலுக்கு முன் இந்த மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கான சிறப்பு பாா்வையாளராக பணியாற்றியவா்.

இதேபோல், முதல்வரின் தனிச் செயலராக கடந்த 2017-ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரி சாந்தனு பாலா நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கு முன்பாக எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமாா் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயா்கள் நீக்கப்பட்டன. இதையடுத்து, மாநிலத்தின் வாக்காளா் எண்ணிக்கை 6.81 கோடியாக குறைந்தது.

இந்த விவகாரத்தை தோ்தல் பிரசாரத்தில் மம்தா பானா்ஜி முக்கியமாக எழுப்பினாா். எனினும், அது எடுபடவில்லை.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 207 இடங்களுடன் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சுவேந்து அதிகாரி சனிக்கிழமை பதவியேற்றாா். இந்தச் சூழலில், முதல்வரின் ஆலோசகா் மற்றும் தனிச்செயலா் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருவரும் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.