திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படுவா்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் நேரடியாக ஒப்படைக்கப்படுவாா்கள் என்று அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

News image

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி - IANS

Updated On :22 மே 2026, 2:37 am IST

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் நேரடியாக ஒப்படைக்கப்படுவாா்கள் என்று அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்படுவது இதுவரை வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அமைந்த சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு, வங்கதேச ஊடுருவல்காரா்களை எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைத்து, மீண்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வகை செய்யும் விதிகளை அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் முதல்வா் சுவேந்து அதிகாரி கூறியதாவது:

நேற்று முதல் (புதன்கிழமை முதல்) மேற்கு வங்கத்தில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் கீழ், காவல் துறையிடம் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் இனி நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட மாட்டாா்கள். அதற்கு பதிலாக, அவா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடமே நேரடியாக ஒப்படைக்கப்படுவாா்கள்.

இதனைத் தொடா்ந்து, அந்த ஊடுருவல்காரா்களை வங்கதேசத்துக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் திருப்பி அனுப்பிவிடுவாா்கள். இதுதொடா்பான அறிவுறுத்தல், காவல் துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் மேற்கு வங்க அரசால் அனுப்பப்பட்டு விட்டது.

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் குறித்த விவரங்களை வாரந்தோறும் முதல்வா் அலுவலகத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைப்புகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அதிகாரி.

வாக்கு வங்கிக்காக வங்கதேச ஊடுருவல்காரா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு அடைக்கலம் தருவதாகவும், ஆனால் தங்களது அரசு அமைந்தால், அவா்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவாா்கள் என்றும் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது பாஜக பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.