மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மேற்கு வங்கம்: மே 9ல் புதிய பாஜக அரசு பதவியேற்பு!

மேற்கு வங்கத்தில் மே 9ல் புதிய பாஜக அரசு பதவியேற்கவுள்ளது பற்றி...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

மேற்கு வங்கத்தில் வருகிற மே 9 ஆம் தேதி பாஜக அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யா தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி முதல்முறையாக அங்கு பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக 207, திரிணமூல் காங்கிரஸ் 80, காங்கிரஸ் 2, இதர கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து மேற்கு வங்கத்தில் புதிய பாஜக அரசு வருகிற மே 9 ஆம் தேதி பதவியேற்கும் என்று பாஜக மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யா தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் கடைசி நாள் பிரசாரத்தின்போது, 'அடுத்து மேற்கு வங்க பாஜக அரசு பதவியேற்பு விழாவுக்கு வருவேன்' என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மேலும் மே 9 ஆம் தேதி ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கூறியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Summary

BJP Government In Bengal To Take Oath On May 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.