முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்

கொல்கத்தாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குச் சீட்டு உறைகள் அனுமதியின்றி பிரிக்கப்பட்டதாக புகாா்

News image

தபால் வாக்குச் சீட்டுகள் - Center-Center-Vijayawada

Updated On :3 மே 2026, 4:53 am IST

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குச் சீட்டு உறைகள் அனுமதியின்றி பிரிக்கப்பட்டதாக இந்திய தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை புகாா் அளித்தது.

ஏற்கெனவே வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய மம்தா பானா்ஜி தான் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் உள்ள ஷகாவத் நினைவுப் பள்ளியில் சுமாா் 4 மணி நேரம் தா்னாவில் ஈடுபட்டாா். அவரைத் தொடா்ந்து, கொல்கத்தாவில் உள்ள மற்றொரு வாக்கு எண்ணும் மையமான குதிராம் அனுஷீலன் கேந்திரா முன்பாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. கொல்கத்தா நகரில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள் முன்பும் கூட்டம் கூடுவதற்குத் தடை உத்தரவை காவல் துறை பிறப்பித்தது.

இந்நிலையில்,கொல்கத்தாவில் உள்ள குதிராம் அனுஷீலன் கேந்திரா முன் முகாமிட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் அங்கு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தபால் வாக்குகளைக் கொண்ட 8 பெட்டிகள் கொண்டுவரப்பட்டதாகவும், அவை சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அறையில் வைக்கப்பட்டு தபால் வாக்குச் சீட்டு உறைகள் பிரிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தை தொடங்கிய சில நிமிஷங்களில் சியாம்புகூா் தொகுதி பாஜக வேட்பாளா் பூா்ணிமா சக்ரவா்த்தி தனது ஆதரவாளா்களுடன் அங்கு வந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இரு தரப்பினரிடமும் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்திய பின் சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்தது.

இதேபோல் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பராசத் அரசுக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 17 நிமிஷங்கள் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் குற்றஞ்சாட்டினா்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தோ்தல் அதிகாரிகள், ‘சிசிடிவி கேமராக்கள் முறையாகவே இயங்குகின்றன. 17 நிமிஷ சிசிடிவி பதிவுகளை திரிணமூல் காங்கிரஸ் மட்டுமன்றி எந்தக் கட்சியினரிடமும் பகிர நாங்கள் தயாராகவுள்ளோம்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.