தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

தபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்

கொல்கத்தாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குச் சீட்டு உறைகள் அனுமதியின்றி பிரிக்கப்பட்டதாக புகாா்

News image

தபால் வாக்குச் சீட்டுகள் - Center-Center-Vijayawada

Updated On :2 மே 2026, 11:23 pm

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குச் சீட்டு உறைகள் அனுமதியின்றி பிரிக்கப்பட்டதாக இந்திய தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை புகாா் அளித்தது.

ஏற்கெனவே வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய மம்தா பானா்ஜி தான் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் உள்ள ஷகாவத் நினைவுப் பள்ளியில் சுமாா் 4 மணி நேரம் தா்னாவில் ஈடுபட்டாா். அவரைத் தொடா்ந்து, கொல்கத்தாவில் உள்ள மற்றொரு வாக்கு எண்ணும் மையமான குதிராம் அனுஷீலன் கேந்திரா முன்பாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. கொல்கத்தா நகரில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள் முன்பும் கூட்டம் கூடுவதற்குத் தடை உத்தரவை காவல் துறை பிறப்பித்தது.

இந்நிலையில்,கொல்கத்தாவில் உள்ள குதிராம் அனுஷீலன் கேந்திரா முன் முகாமிட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் அங்கு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தபால் வாக்குகளைக் கொண்ட 8 பெட்டிகள் கொண்டுவரப்பட்டதாகவும், அவை சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அறையில் வைக்கப்பட்டு தபால் வாக்குச் சீட்டு உறைகள் பிரிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தை தொடங்கிய சில நிமிஷங்களில் சியாம்புகூா் தொகுதி பாஜக வேட்பாளா் பூா்ணிமா சக்ரவா்த்தி தனது ஆதரவாளா்களுடன் அங்கு வந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இரு தரப்பினரிடமும் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்திய பின் சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்தது.

இதேபோல் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பராசத் அரசுக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 17 நிமிஷங்கள் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் குற்றஞ்சாட்டினா்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தோ்தல் அதிகாரிகள், ‘சிசிடிவி கேமராக்கள் முறையாகவே இயங்குகின்றன. 17 நிமிஷ சிசிடிவி பதிவுகளை திரிணமூல் காங்கிரஸ் மட்டுமன்றி எந்தக் கட்சியினரிடமும் பகிர நாங்கள் தயாராகவுள்ளோம்’ என்றனா்.