மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) முதலீட்டாளா்கள் மேற்கொள்வதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.
அதேவேளையில் அந்நிய செலாவணி மேலாண்மை (இரண்டாவது திருத்தம்) விதிமுறைகள் 2026-இன்படி, மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்டாலும், ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (எல்ஐசி) அந்நிய நேரடி முதலீட்டை 20 சதவீதம் வரை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
முன்பு மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல், காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் சப்கா பீமா சப்கி ரக்ஷா (காப்பீட்டு சட்டங்கள் திருத்தம்) மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதையடுத்து அந்த முதலீட்டு வரம்பு 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, மசோதா சட்டமானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் பொறுப்பேற்பு

அரசின் முன் அனுமதி இல்லாமல் முதலீடு: 10% சீனப் பங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!

ஓய்வூதியத் துறையில் எஃப்டிஐ வரம்பு அதிகரிப்பு?: விரைவில் மசோதா தாக்கலாக வாய்ப்பு!
விடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


