மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிகார்: கோயில் கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழப்பு

பிகார் கோயிலில் கூட்டநெரிசல் ஏற்பட்டது பற்றி...

News image

பிகார் கோயிலில் கூட்டநெரிசல் - ANI

Updated On :31 மார்ச் 2026, 6:59 am

பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்தனர்.

இது குறித்து பிகார் ஷரீஃப் காவல் துறைக் கண்காணிப்பாளர் நூருல் ஹக் கூறியதாவது: நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஷீத்தலா மாதா கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர்.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணியைத் தொடங்கினர்' என்றார்.

காவல் அதிகாரி இடைநீக்கம்: கோயில் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, தீப் நகர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக நாளந்தா மாவட்ட காவல் துறை தெரிவித்தது.

மேலும், கூட்ட நெரிசலுக்கான காரணங்களைக் கண்டறிய கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரங்கல், நிவாரணம்: ராஜ்கிர் நகரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு பிகார் சென்றார். இந்நிலையில், அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "ஷீத்தலா மாதா கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் நிதீஷ் குமார் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கோயில் கூட்ட நெரிசல் சம்பவம் கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு மாநில அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்தார்.

Summary

Stampede at Bihar Temple! 9 Dead!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.