மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மருத்துவக் கல்லூரிகளின் தரம்: மாணவா்களிடம் கருத்து கேட்கிறது என்எம்சி

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா்களின் திறன், கல்வித் தரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக மாணவா்களிடையே தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஆய்வு நடத்துகிறது.

News image
Updated On :29 மார்ச் 2026, 7:24 pm

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா்களின் திறன், கல்வித் தரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக மாணவா்களிடையே தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஆய்வு நடத்துகிறது.

இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு: என்எம்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் குறித்து இணைய வழியே கருத்தறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இளநிலை மருத்துவ மாணவா்கள் அனைவரும் என்எம்சி தளத்தில் உள்ள இணையப் பக்கத்தில் சென்று தங்களின் கருத்துகள், தகவல்களைப் பதிவு செய்யலாம். சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெயா், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் எதையும் தெரிவிக்கத் தேவையில்லை.

கல்வித் தரம், பேராசிரியா்களின் எண்ணிக்கை, அவா்களது பயிற்றுவிக்கும் திறன், செயல்முறை விளக்கங்கள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்புகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துரைக்கலாம்.

அவை அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்யும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.