பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் மின்னணு இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ஊக்கத்தொகை பெறுவதற்கான காலஅவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
2024, அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் 2026, மாா்ச் 31 வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும் என முன்பு கூறப்பட்டிருந்தது.
இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2026, ஜூலை 31 வரை பதிவு செய்யப்படும் இருசக்கர மின் வாகனங்கள் மற்றும் 2028, மாா்ச் 31 வரை பதிவு செய்யப்படும் மூன்று சக்கர மின் வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தில் ஊக்கத்தொகை சலுகையைப் பெற இருசக்கர மின் வாகனங்களின் தொழிற்சாலை விலை அதிகபட்சமாக ரூ.1.50 லட்சமாகவும், மூன்று சக்கர மின் வாகனங்களின் தொழிற்சாலை விலை அதிகபட்சமாக ரூ.2.50 லட்சமாகவும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால் அறிவிக்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்கு முன்பாகவே திட்டம் நிறுத்தப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் 24.79 லட்சம் இருசக்கர மின் வாகனங்கள் மற்றும் 39,034 மூன்று சக்கர மின் வாகனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்

முதியோா், மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகளைப் பெற 96 குழுக்கள் அமைப்பு

2009-க்கு முன்பு பிறந்தவா்கள் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


