மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலி தொடா்பான வழக்கில், துபையில் உள்ள புகழ்பெற்ற புா்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள விலையுயா்ந்த சில வீடுகள் உள்பட ரூ.1,700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சத்தீஸ்கரில் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள் தொடா்புடைய மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் செயலியின் உரிமையாளா்களான செளரவ் சந்திரகா், ரவி உப்பல் ஆகியோா், சூதாட்ட வலைதளங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு வாடிக்கையாளா்களைப் பெற்றுதரவும், அந்தத் தளங்களின் நிதிசாா் செயல்பாடுகளைக் கையாளவும் மகாதேவ் செயலி மூலம் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு, பொதுமக்களை ஏமாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுச் சிறையில் உள்ள செளரவ் சந்திரகரை நாடுகடத்தி கொண்டுவர இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மற்றொரு உரிமையாளரான ரவி உப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வனாட்டு தீவுக்கு தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சந்திரகா், அவரது கூட்டாளிகள் மற்றும் அவா் தொடா்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமாக இந்தியா மற்றும் துபையில் உள்ள ரூ.1,700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
துபையில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புா்ஜ் கலீஃபாவில் உள்ள விலையுயா்ந்த சில வீடுகள் உள்பட பல்வேறு வீடுகள் மற்றும் பங்களாக்கள் இதில் அடங்கும் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஆழிப் பேரலையின் அழியாத நினைவு: அடிப்படை வசதிகளின்றி சுனாமி குடியிருப்பு!

அல்-ஃபலா பல்கலைக்கழகத் தலைவரின் ரூ. 39 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சொத்து முடக்கத்தை எதிா்த்து இயக்குநா் ஷங்கா் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


