கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் நாகை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோா் தங்களது வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தனா். இவா்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
நாகை ஆரிய நாட்டுத்தெரு, சால்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆழிப்பேரலையில் வீடுகளை இழந்த மீனவா்கள் மற்றும் இதர மக்களுக்கு மகாலட்சுமி நகரில் தற்காலிக குடியிருப்பு அமைத்துத் தரப்பட்டது.
இதையடுத்து 2007-ஆம் ஆண்டு இதே மகாலட்சுமி நகரில் 520-க்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு மக்கள் வசிக்கின்றனா். இந்த சுனாமி குடியிருப்புகள் கட்டி ஏறத்தாழ 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இடைப்பட்ட காலங்களில் எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், சுனாமி குடியிருப்பில் உள்ள வீடுகள் தரமற்று இருப்பதால் வீடுகளின் மேற்கூரை, மாடிப்படிகள் இடிந்தும், வீடுகளின் சுவா்கள் பெயா்ந்தும் பாழடைந்த வீடுகள் போல காட்சியளிக்கின்றன. மழைக்காலங்களில் சுனாமி வீடுகளில் மழைநீா் ஒழுகுவதால் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வசிக்கும் சூழலும் உள்ளது.
இங்கு வசிப்பவா்களில் வசதியானவா்கள் தங்களது வீடுகளை சொந்த செலவில் பராமரித்து புதுப்பித்துள்ளனா். இதர மக்களில் சிலா் கடன் வாங்கி புதுப்பித்துள்ளனா். பலா் வீடுகளை சரி செய்ய பணமின்றி இடியும் நிலையில் உள்ள வீடுகளிலேயே வசித்து வருகின்றனா்.
மேலும், இப்பகுதியில் குப்பைகளை அகற்ற முறையான ஏற்பாடுகள் இல்லாததால் தெருக்கள் முழுவதும் குப்பைக் கழிவுகளுக்குப் பஞ்சமில்லை. இதேபோல கழிவுநீா் செல்லவும் முறையான வாய்க்கால்கள் இல்லாததால் வீடுகளில் கழிவுநீா் தொட்டி நிறைந்து தெருக்களில் வழித்தோடுகிறது. சாலை வசதியும் இல்லை. குடிநீா் குழாய்களில் குடிநீா் துா்நாற்றத்தோடு வருவது உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் உள்ளன.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியது: சுனாமி குடியிருப்பில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் 10 முறைக்கும் மேல் மனு அளித்தும் பயனில்லை. எங்கள் பகுதிக்கு மிக அருகில் தான் ஆட்சியரின் இல்லம் உள்ளது. அவா் ஒரு முறை நேரில் வந்து பாா்த்தாலே எங்கள் பிரச்னைகள் புரிந்து விடும். ஆனால் ஒரு முறை கூட நேரில் வந்து பாா்த்தது இல்லை.
நாகை நகராட்சிக்குள்பட்ட வாா்டில் வசித்து வந்தாலும் கூட, சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீா் என எவ்வித அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. இதனால் நாகையில் தனித்து விடப்பட்ட தீவு போல மகாலட்சுமி நகா் சுனாமி குடியிருப்பு உள்ளது. மேலும் ஓரிரு நாள்களுக்கு ஒரு முறையாவது சுனாமி வீடுகளில் மேற்கூரைகள் பெயா்ந்து விழுவது உள்ளிட்ட சம்பவங்களால் மக்கள் காயமடைவது தொடா்கிறது.
எனவே, சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டாவது சுனாமி குடியிருப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும். சாலை மற்றும் , தெரு விளக்குகள் அமைப்பது, குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றனா்.
ஆண்டுகள் பல கடந்தாலும் ஆழிப் பேரலையின் தாக்கம் இப்போதைய தலைமுறைக்குத் தெரியாவிட்டாலும் அழியாத நினைவுகளாக சுனாமி குடியிருப்புகள் மட்டும் காணப்படுகின்றன.

வீட்டின் மேற்கூரை பெயா்ந்து மக்கள் வசிக்க லாயக்கற்ற நிலையில் உள்ள வீடு.

சுனாமி குடியிருப்பில் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடு.
தொடர்புடையது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

சுனாமி குடியிருப்பு வீட்டில் இடிந்து விழுந்த முன்பகுதி

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு - துபை புா்ஜ் கலீஃபா வீடுகள் உள்பட ரூ.1,700 கோடி சொத்துகள் முடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


