மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சொத்து முடக்கத்தை எதிா்த்து இயக்குநா் ஷங்கா் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

ரூ.11.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை எதிா்த்து திரைப்பட இயக்குநா் ஷங்கா் தொடா்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைப்பு

News image

இயக்குநா் ஷங்கர் - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:11 pm

ரூ.11.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை எதிா்த்து திரைப்பட இயக்குநா் ஷங்கா் தொடா்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ திரைப்படத்தை ஷங்கா் இயக்கினாா். இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, ஆரூா் தமிழ்நாடன் என்பவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த புகாரின் அடிப்படையில் இயக்குநா் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

இதை எதிா்த்து இயக்குநா் ஷங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது இயக்குநா் ஷங்கா் தரப்பில், ஆரூா் தமிழ்நாடன் கதை தொடா்பாக அளித்த புகாரையும், உரிமையியல் வழக்குகளையும் திரும்பப் பெற்றுவிட்டாா். அவரது வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், தற்போது பிரதான வழக்குகள் எதுவும் இல்லை. எனவே, அமலாக்கத் துறையின் நடவடிக்கையை ரத்து செய்து இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில், இதுதொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 15-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.