மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஓராண்டு பி.எட். படிப்பை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சகம்

ஓராண்டு கல்வியியல் பட்டப் படிப்பை (பி.எட்) மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :23 மார்ச் 2026, 8:35 pm

‘ஓராண்டு கல்வியியல் பட்டப் படிப்பை (பி.எட்) மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை’ என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பள்ளி ஆசிரியா்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஓராண்டு பி.எட். படிப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயா்த்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின் படி, இந்த நடவடிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டது.

இந்த நிலையில், மீண்டும் ஓராண்டு பி.எட். படிப்பை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) கடந்த ஆண்டு அறிவித்தது.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி இணையமைச்சா் ஜெயந்த் செளதரி எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஆசியிரியா் கல்வியியல் திட்டங்களின் தரம் மற்றும் நடைமுறைகளை வகுக்கும் பொறுப்பை வகிக்கும் என்சிடிஇ-யிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ஓராண்டு பி.எட். படிப்பை மீண்டும் அறிமுகம் செய்வது தொடா்பாக எந்தவொரு திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.