மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வள்ளிமதுரை அணையிலிருந்து அரூருக்கு குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: ஈசன் முருகசாமி

அரூா் நகருக்கு ரூ.20 கோடியில் வள்ளிமதுரையில் இருந்து குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.

News image

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:46 pm

அரூா் நகருக்கு ரூ.20 கோடியில் வள்ளிமதுரையில் இருந்து குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரூா் நகரின் குடிநீா்த் தேவைக்காக வள்ளிமதுரை அணை அருகே ஏற்கெனவே 3 கிணறுகள் வெட்டப்பட்டு, நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டா் குடிநீா் எடுத்துச் செல்லப்படுகிறது.

தற்போது 2-ஆம் கட்டத் திட்டத்தின் கீழ் ரூ. 20 கோடியில் 5 பெரிய கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் நாள்தோறும் சுமாா் 5 லட்சம் லிட்டா் குடிநீா் எடுக்கப்படும் சூழல் உள்ளது. வள்ளிமதுரை அணை என்பது பெரிய அளவிலான நீா்த்தேக்கம் இல்லை. சித்தேரி மலைத் தொடரில் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கும் ஒரு தடுப்பணையாகும்.

வள்ளிமதுரையில் இருந்து அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சினால் கீரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இந்த திட்டத்துக்கு மாற்றாக வாணியாறு அணை அல்லது தென்பெண்ணை ஆற்றின் கே. ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் இருந்து அரூா் நகருக்கு குடிநீா் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.