மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமூக ஊடகத்திலிருந்து தனிப்பட்ட தகவல் திரட்டப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பு முகமைகள் திரட்டுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

மத்திய உள்துறை அமைச்சகம்

Updated On :31 மார்ச் 2026, 7:16 pm

சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பு முகமைகள் திரட்டுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக நாடாளுமன்றத் தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலைக் குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை சமா்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இணையதளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் பொது வெளியில் உள்ள தகவல்களைத்தான் உளவுத்துறை திரட்டுகிறது. சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட அல்லது அந்தரங்க தகவல் எதுவும் திரட்டப்படுவதில்லை. இதில் தன்மறைப்பு நிலை (பிரைவஸி) மீறப்படவில்லை.

இவ்வாறு பொது வெளியில் உள்ள தகவல்களைத் திரட்டும் வழிமுறையானது இணையவழி, வேலைவாய்ப்பு, முதலீடு, திருமண மோசடிகளை கண்டறிவதற்கான இணைய இணைப்புகள், வலைதளங்களைக் கண்காணிக்க உதவும்.

உளவுத் தகவல்களைத் திரட்டும் திறன்களை மேம்படுத்திக் கொள்வதிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாதுகாப்பு முகமைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.