மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!

பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது செய்யப்பட்டது பற்றி...

News image

பிரதமர் நரேந்திர மோடி - AP

Updated On :21 மார்ச் 2026, 9:11 am

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்து வெளியிட்ட நபரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

பிகார் மாநிலத்தின் அர்வால் நகரைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படங்களை மிக மோசமாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, சிந்தாந்த் குமார் என்கிற அந்த நபரை பிகாரின் மௌலானாசக் என்ற கிராமத்தில் வைத்து தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், அந்த நபர் தொடர்ந்து இவ்வாறு புகைப்படங்களைச் சித்திரித்து வெளியிட்டதும், அவற்றைப் பல்வேற்று சமூக வலைதளக் கணக்குகளில் பதிவிட்டதும் தெரியவந்தது.

அவரின் பதிவுகள் மக்களைத் தவறாக வழிநடத்தி பொது அமைதியைக் குலைக்கும் என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், பாஜக பெண் தலைவர்கள் பலருடைய படங்களையும் மார்பிங் செய்ததாகவும் அந்த நபர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட காவல்துறையினர் அந்த நபர் மீது 336 (4) (போலி ஆவணங்களைத் தயாரித்தல்), 356 (அவதூறு), 351 (1) (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாகத் தெரிவித்தனர்.

Summary

Delhi Police arrests man for posting objectionable AI images of PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.