ரேமண்ட் குழுமத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கௌதம் சிங்கானியா சென்ற வேகப்படகு விபத்துக்குள்ளானது.
ரேமண்ட் ஆடை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருப்பவர் கௌதம் சிங்கானியா (60). இவர் மாலத்தீவில் உள்ள ஃபெலிதூ தீவுக்கு சுற்றுலா சென்றார்.
அங்கு வேகப்படகில் பயணித்த இவர் நேற்று (மார்ச் 19) விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் வெளியாகின. வேகப்படகில் இவருடன் சேர்ந்து 5 இந்திய ஆண்கள் உள்பட 7 பேர் இருந்தனர்.
இந்த நிலையில், படகு வேகமாக சென்றபோது ஏற்பட்ட விபத்தில் படகில் இருந்த 5 பேர் கடலில் விழுந்தனர். விபத்துக்குள்ளான படகு அதிவேக பந்தயங்களுக்குப் பயன்படுத்தப்படும் படகாகும்.
இந்த விபத்தில் கௌதம் சிங்கானியா மீட்கப்பட்டார். அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது நலமாக உள்ளார்.
இவருடன் கடலில் விழுந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டனர், ஆனால், அதில் இந்தியர்கள் 2 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் போனவர்களின் உடல்களைத் தேடும் பணியில் மாலத்தீவு கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Speedboat carrying Raymond company owner crashes. 2 Indians died.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!

பொதுத்துறை எஃகு நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு அசோக் குமார் பாண்டா பரிந்துரை!

ஆர்சிபி என் டிஎன்ஏவின் ஒரு பகுதியாக எப்போதும் இருக்கும்: விஜய் மல்லையா

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ. 52 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



