புதுதில்லி: எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை மகாரத்னா நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (செயில்), நிறுவனத்தின் உயரிய பதவிக்கு, அந்நிறுவனத்தின் நிதி இயக்குநரான அசோக் குமார் பாண்டாவை, அரசுப் பணியாளர் தேர்வு தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்காக நேர்காணல் முடிவடைந்த நிலையில், இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 10 நபர்களில் பாண்டாவும் ஒருவர்.
இதனிடையில், தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான அமரேந்து பிரகாஷின் பதவிக்காலம் ஏப்ரல் 2, 2026 அன்று முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், மார்ச் 28 தேதியிட்ட ஓர் அறிவிக்கையில், செயில்-இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்கு அசோக் குமார் பாண்டாவை பரிந்துரைத்துள்ளதாக பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மின் பொறியியலில் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, செயில் மேலாண்மைப் பயிற்சியாளராக தனது பணியை தொடங்கினார் அசோக் குமார் பாண்டா. பாண்டா தற்போது ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிதி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏா் இந்தியா ஊழியா்களுக்குப் புதிய சலுகை: பணித்திறன் அடிப்படையில் பங்குகள் திட்டம்
ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!
விஜய் பாதுகாப்பு! பதவியில் இல்லாத மத்திய செயலருக்கு கடிதம் எழுதிய தவெக!

இண்டிகோ நிறுவனத்துக்கு முதன்மை வியூக அலுவலர் நியமனம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


