லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிலிண்டர் தட்டுப்பாடு: விறகுகள் விலையும் அதிகரிப்பு!

எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் விறகுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்

News image

விறகுகள் - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:16 am

எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் விறகுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு ஏற்றுமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் விறகு அடுப்புக்கு உணவகங்கள், விடுதிகள், தேநீர்க் கடைகள் மாறத் தொடங்கியுள்ளனர். இதனால், விறகுகளின் தேவை அதிகரித்துள்ளது. சராசரியாக ஒருநாளில் ஒரு டன் விறகு விற்பனை, தற்போது 10 டன்னாக அதிகரித்துள்ளது.

விறகுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. விறகுகள் ஒரு டன்னுக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரையில் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு டன் விறகு விலை ரூ. 6,000-லிருந்து ரூ. 8,000-ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, மதுரை மாவட்டத்தில் இன்னும் இரு நாள்களில் விறகுத் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், விறகு தேவையின் அதிகரிப்பு, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Summary

Cylinder shortage: Firewood prices also increase!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.