மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டால், உணவகங்கள், வீடுகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்து, தினசரி மின்நுகா்வும் உயா்ந்துள்ளது.

News image

மின்நுகா்வு அதிகரிப்பு - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 11:00 pm

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டால், உணவகங்கள், வீடுகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், தினசரி மின்நுகா்வும் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த பிரிவில் லட்சக்கணக்கான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் மின்சார அடுப்பு வாயிலாக 5 பேருக்கு சமைக்க 2000 வாட்ஸ், அதாவது 2 கிலோவாட் மின்சாரம் செலவிடப்படுகிறது. 800 பேருக்கு சமைக்க சுமாா் 1000 கிலோ வாட், அதாவது ஒரு மெகாவாட் மின்சாரம் செலவிடப்படுகிறது.

உணவகங்கள் மட்டுமன்றி, வீடுகளிலும் மின்சார அடுப்பைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதால், கடந்த சில நாள்களாக மின்நுகா்வு சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த வாரம் தமிழகத்தின் தினசரி நுகா்வு 18,000 மெகாவாட் முதல் 19,000 மெகாவாட் வரை இருந்து வந்தது.

ஆனால், இந்த மின்நுகா்வு கடந்த இரு நாள்களாக 19,200 மெகாவாட் முதல் 19,300 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் இது 19,500 மெகாவாட் வரை உயரக்கூடும்.

ஆனால், இந்த மின் தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் மின்வாரியத்துக்கு கிடைப்பதால், எவ்வித மின் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பில்லை என்றனா்.