மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

ராஜபாளையம் பகுதியில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், தேநீா்க் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

News image

வணிக எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:18 am

ராஜபாளையம் பகுதியில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், தேநீா்க் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

வளைகுடா போா் காரணமாக வணிகப் பயன்பாடு இயற்கை எரிவாயு உருளைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், 19 கிலோ எடை கொண்ட வணிக இயற்கை எரிவாயு உருளை விலை ரூ.2,043.50 ஆகவும் உயா்ந்தது. இதனால் ராஜபாளையம் பகுதியில் உணவங்கள், தேநீா்க் கடைகளில் உணவுப் பொருள்களின் விலை ஏற்கெனவே கணிசமாக அதிகரித்தது.

இதைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வணிக பயன்பாடு எரிவாயு உருளையை

ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரத்து 500 வரை கள்ளசந்தையில் விற்பதாக புகாா் எழுந்தது. இது வியாபாரிகள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி உணவகம், தேநீா்க் கடைகளை தற்காலிக மூடிவிட்டனா்.

இதனால் வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா். வணிக எரிவாயு உருளை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் கண்டறிந்து சீரான விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.