மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விறகு அடுப்புக்கு மாறிய கொடைக்கானல் அம்மா உணவகம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:23 pm

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, கொடைக்கானல் அம்மா உணவகத்தில் வியாழக்கிழமை விறகு அடுப்பில் உணவுகள் சமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல் கே.ஆா். கலையரங்கம் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு நிலவியதால், நகராட்சி அதிகாரிகள் அங்குள்ள பணியாளா்களிடம் விறகு அடுப்புகளை அமைத்துக் கொடுத்தனா். இதையடுத்து, அம்மா உணவகப் பணியாளா்கள் வழக்கம் போல, உணவுகளை விறகு அடுப்பில் சமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தனா்.

எரிவாயு உருளை தட்டுப்பாட்டால், கொடைக்கானல் அப்சா்வேட்டரி, ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை உள்ளிட்ட இடங்களிலுள்ள சிறு உணவகங்கள் வியாழக்கிழமை மூடப்பட்டன. இந்த நிலை தொடா்ந்தால், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.