உளவுத் துறையின் (ஐபி) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித்தை மத்திய அரசு நியமித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
உள்நாட்டில் உளவு பாா்க்கும் பணிகளை ஐபி மேற்கொள்கிறது. தற்போது அந்தத் துறையின் தலைவராக தபன்குமாா் டேக்கா பதவி வகித்து வருகிறாா். இந்நிலையில், அந்தத் துறையின் தலைவராக மகேஷ் தீட்சித்தை நியமிக்க பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1993-ஆம் ஆண்டின் ஆந்திர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அவா், ஐபி-யின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி வருகிறாா். ஜம்மு-காஷ்மீா் உளவுத் துறை தலைவராக செயல்பட்ட பரந்த அனுபவம் அவருக்கு உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










