இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! 90 கி.மீ. வேகத்தில் காற்று! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

தில்லியை புழுதிப் புயல் தாக்கியதை அடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...

News image

தில்லியை தாக்கிய புழுதிப் புயல் - ANI

Updated On :15 ஜூன் 2026, 5:29 pm IST

தில்லியில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு இன்று பிற்பகல் புழுதிப் புயல் தாக்கிய நிலையில், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தில்லியில் சமீப காலமாக திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு, பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் முன் கணிப்புக்கு மாறாக நிகழ்ந்து வரும் மாற்றத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், தில்லியின் பல்வேறு பகுதியில் இன்று பிற்பகல் வானிலை மாற்றம் ஏற்பட்டு, புழுதிப் புயல் தாக்கியது. இதனால் சாலைகள் கண்ணுக்கு தெரியாத வகையில் புழுதி மூட்டம் படர்ந்தது.

தில்லி மட்டுமின்றி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இன்று புழுதிப் புயல் தாக்கியது. பாலம் பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் காற்றின் வேகம் 92 கி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தில்லியின் பல்வேறு பகுதிகளில் 70 - 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மரங்கள், மின் கம்பங்கள், பலவீனமான கட்டடங்கள் ஆகிய பகுதியைவிட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இமயமலைப் பகுதியை பாதித்து வரும் 'மேற்குத் திசை இடையூறு' (western disturbance) எனப்படும் வானிலை மாற்றமே இதற்கு காரணம் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாதிப்பானது செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக குறைந்து வெப்பநிலை உயரக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Summary

Dust storm hits Delhi - Winds at 90 km/h - Red alert issued

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.