வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்தியர்களைக் கொன்றதற்காக டிரம்ப்புக்கு நன்றியா? பிரதமர் மோடிக்கு கேஜரிவால் கேள்வி

நாட்டின் பெருமையையும் இறையாண்மையையும் அமெரிக்காவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

News image

பிரதமர் மோடி | அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:51 pm IST

நாட்டின் பெருமையையும் இறையாண்மையையும் அமெரிக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிக நாள் பிரதமர் சாதனைக்காக வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய அரவிந்த் கேஜரிவால், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார். ஆனால், அவர் எதற்காக நன்றி கூறுகிறார்? இந்தியர்கள் இருந்த கப்பல்களைத் தாக்கியதற்காகவா? அல்லது இந்தியர்களைக் கொன்றதற்காகவா?

தற்போது நாட்டின் நிலைமை நம்பிக்கையற்ற முறையில் மாறியுள்ளது.

இந்தியாவின் பெருமையையும் இறையாண்மையையும் விட்டுவிட்டு, பிரதமர் மோடி முழுவதுமாக சரணடைந்து விட்டார்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் நீண்ட நாள்கள் தொடர்ந்து பிரதமராக தொடரும் நரேந்திர மோடிக்கு பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, தனக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்தார்.

Summary

PM Modi has completely surrendered India's sovereignty and pride, says AAP Leader Arvind Kejriwal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.