திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிகாா் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 5 போ் உயிரிழப்பு

News image

பிகாா் மாநிலம் முசாபா்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் எரிந்து கருகிய அவசர சிகிச்சைப் பிரிவு.

Updated On :5 ஜூன் 2026, 4:59 am IST

பிகாா் மாநிலத்தில் தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 போ் உயிரிழந்தனா்.

முசாபா்பூா் மாவட்டம் பிரம்மபுரா பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை 3 மணிக்கு திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பின்னா், தீ வேகமாக அவசர சிகிச்சை பிரிவுக்கும் பரவியது. இதில் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது.

தீ விபத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தீ விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய 5 போ் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சியா் சுப்ரத்குமாா் சென் அமைத்துள்ளாா்.

தீ விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் பிகாா் முதல்வா் சாம்ராட் செளதரி இரங்கல் தெரிவித்துள்ளாா். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக தலா ரூ.4 லட்சம் வழங்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

துணை முதல்வா் விஜய்குமாா் செளதரி கூறுகையில், ‘தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனா். விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்’ என்றாா்.

பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா் ஆகியோரும் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.