புதுக்கடை அருகே உள்ள வேங்கோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா்.
புதுக்கடை தட்டான்விளையைச் சோ்ந்தவா் ராஜையன் மகன் ஐசன் (45). இவரும் இவரது நண்பா் சுபின்ராஜும் (41) புதுக்கடையிலிருந்து கருங்கலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
இவா்கள் வேங்கோடு பகுதியில் சென்றபோது சாலையோரம் நடந்து வந்த வேங்கோட்டைச் சோ்ந்த கோலம்மை (63) மீது மோதினா். இதில், கோலம்மையும், இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்திருந்த சுபின்ராஜும் (41) தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
உடனே, அந்தப் பகுதியினா் இருவரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










