ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுக்கு எதிராகப் போராட வெளிநாட்டு நிதி வருகிறதா? சிஜேபி அபிஜீத் தீப்கே பதில்

ஆளும் பாஜக அரசுக்கு எதிராகப் போராட வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறதா? என்ற கேள்விக்கு அபிஜீத் தீப்கே அளித்த பதில் குறித்து...

cockroach janata party abhijeet dipke

அபிஜீத் தீப்கே - எக்ஸ்

Published On :30 ஜூலை 2026, 8:41 pm IST

ஆளும் பாஜக அரசுக்கு எதிராகப் போராட வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறதா? என்ற கேள்விக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அபிஜீத் தீப்கே:

எனக்கு வெளிநாட்டில் இருந்து நிதி கிடைக்கிறது என்றால், அது அமித் ஷா போன்ற ஒருவரின் தோல்வியின் பிரதிபலிப்பாகவே நான் கருதுகிறேன். அமித் ஷா பதவி விலக வேண்டும்.

ஒரு நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றொருவரால் இயக்கப்படுகிறார் என்றால், அது என்ன மாதிரியான சாணக்கியத்தனம்? ஜூலை 20 ஆம் தேதி மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்த உத்தரவிட்டது அமித் ஷாதான், வேறு யாரும் இல்லை.

எங்கள் போராட்டத்திற்கு விவசாய சங்கத்தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றே விவசாயிகளும் நினைப்பார்கள். அதனால் எங்களுடன் போராட்டக் களத்தில் நின்றனர். அவர்களுக்குநாங்களும் ஆதரவாக நிற்போம். நானும் விவசயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். போராட்டத்தில் ஈடுபட்ட பலர் இளைஞர்களும் விவசாய குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்கள்தான் எனக் குறிப்பிட்டார்.

Summary

Is foreign funding arriving to fuel protests against the government cockroach janata party abhijeet dipke responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.