வெனிசுவேலாவில் கடந்த மே மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த இந்திய மாலுமியின் உடல் தாயகம் திரும்பிய நிலையில், அதில், இதயம், மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகள் மாயமாகியிருப்பது குறித்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகேண் சௌஹான் உடல், இந்தியாவில் மீண்டும் உடல் கூராய்வு செய்யப்பட்டபோது, உடலில், முக்கிய உறுப்புகள் மாயமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு, வெனிசுவேலா தூதரகத்தைத் தொடர்புகொண்டு கேட்டறியுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
மேலும், ராகேஷின் உடல்கூராய்வு முடிவுகள் எதையும் வெனிசுவேலா வெளியிடவில்லை, உடலுடன் அனுப்பிவைக்கவும் இல்லை என்பதால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், ராகேஷ் உடலில், இதயம், மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகங்கள் என எந்த முக்கிய பாகங்களும் இல்லை. உடலில் ஏராளமான தையல்கள் போடப்பட்டிருந்தன. ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை 21 தையல்களும், கழுத்திலிருந்து 22 தையல்களும் போடப்பட்டிருக்கின்றன.
ஒரு மாதத்துக்கும் மேல் குளிர்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு உடல் பாகமும் இல்லாததால், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியவே முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிய போட்டிக்கான இந்திய மகளிரணி அறிவிப்பு; அணியை வழிநடத்தும் ஹர்மன்பிரீத் கௌர்!

ஓமன் நாட்டில் உயிரிழந்த மாலுமியின் உடல் தூத்துக்குடி வருகை

ஓமன் நாட்டில் உயிரிழந்த மாலுமியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டுவர நடவடிக்கை








