ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

இந்திய மாலுமியின் உடலில் இதயம், மூளை, நுரையீரல் மாயம்! பதில் கோரும் குடும்பம்

இந்திய மாலுமியின் உடலில் இதயம், மூளை, நுரையீரல் மாயமாகியிருப்பது குறித்து விளக்கம் கேட்கிறது அவரது குடும்பம்

News image
Updated On :1 ஜூலை 2026, 1:27 pm IST

வெனிசுவேலாவில் கடந்த மே மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த இந்திய மாலுமியின் உடல் தாயகம் திரும்பிய நிலையில், அதில், இதயம், மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகள் மாயமாகியிருப்பது குறித்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகேண் சௌஹான் உடல், இந்தியாவில் மீண்டும் உடல் கூராய்வு செய்யப்பட்டபோது, உடலில், முக்கிய உறுப்புகள் மாயமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு, வெனிசுவேலா தூதரகத்தைத் தொடர்புகொண்டு கேட்டறியுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மேலும், ராகேஷின் உடல்கூராய்வு முடிவுகள் எதையும் வெனிசுவேலா வெளியிடவில்லை, உடலுடன் அனுப்பிவைக்கவும் இல்லை என்பதால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், ராகேஷ் உடலில், இதயம், மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகங்கள் என எந்த முக்கிய பாகங்களும் இல்லை. உடலில் ஏராளமான தையல்கள் போடப்பட்டிருந்தன. ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை 21 தையல்களும், கழுத்திலிருந்து 22 தையல்களும் போடப்பட்டிருக்கின்றன.

ஒரு மாதத்துக்கும் மேல் குளிர்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு உடல் பாகமும் இல்லாததால், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியவே முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.