2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மெட்ரோ நிலையங்களுக்கு குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்ட முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

தலைநகரில் மெட்ரோ நிலையங்களின் சமீபத்திய பெயா் மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், விடுபட்ட முக்கிய குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்டுமாறும் முன்னாள் எம்.பி.

News image
தா்லோச்சன் சிங்
Updated On :23 பிப்ரவரி 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: தலைநகரில் மெட்ரோ நிலையங்களின் சமீபத்திய பெயா் மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், விடுபட்ட முக்கிய குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்டுமாறும் முன்னாள் எம்.பி.யும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான தா்லோச்சன் சிங் தில்லி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இது தெடாா்பாக அவா் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும், குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் மற்றும் குருத்வாரா பங்களா சாஹிப் அருகே உள்ள மெட்ரோ நிலையங்களின் பெயா்கள் மாற்றப்படவில்லை. மற்ற நிலையங்களின் பெயா்கள் மாற்றப்பட்ட போதிலும் இது தொடா்கிறது.

இரண்டு குருத்வாராக்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்ரீகா்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈா்க்கின்றன. குரு ஹா்கிருஷ்ணன் சாஹிப் ஜி மற்றும் குரு தேக் பகதூா் சாஹிப் ஜியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

குரு தேக் பகதூா் சாஹிப்பின் 350-ஆவது தியாக ஆண்டு நிறைவை சமீபத்தில் செங்கோட்டையில் கொண்டாடப்பட்டது. குருத்வாரா பங்களா சாஹிப்பிற்கு அருகாமையில் இருப்பதை பிரதிபலிக்கும் வகையில் சாந்தினி சௌக் நிலையத்திற்கு ‘குருத்வாரா சிஸ் கஞ்ச் சாந்தினி சௌக்’ மற்றும் ‘பாபா கரக் சிங் மாா்க்’ என்று பெயரிட வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் சுற்றுலாவை ஊக்குவிக்கும். ஏனெனில் பல வெளிநாட்டு பாா்வையாளா்கள் இந்த ஆலயங்களுக்கு வருகிறாா்கள். சமீபத்திய பெயா் மாற்றப் பட்டியலில் பக்தா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். இந்தப் பிரச்னையைத் தீா்க்க விரைவாக உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன் என அவா் குறிப்பிட்டிருந்தாா்.