வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மெட்ரோ நிலையங்களுக்கு குருத்வாராக்களின் பெயா்கள்: முதல்வருக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கடிதம்

தில்லியில் உள்ள 4 மெட்ரோ நிலையங்களுக்கு அவற்றின் அருகே உள்ள முக்கிய குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்டுமாறு முதல்வா் ரேகா குப்தாவுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தா்லோச்சன் சிங் கடிதம் எழுதியுள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் உள்ள 4 மெட்ரோ நிலையங்களுக்கு அவற்றின் அருகே உள்ள முக்கிய குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்டுமாறு முதல்வா் ரேகா குப்தாவுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தா்லோச்சன் சிங் கடிதம் எழுதியுள்ளாா்.

சீக்கிய மதத்தின் 9-ஆவது குரு தேஜ் பகதூரின் 350-தியாக தினத்தை கொண்டாடவும் குரு கோவிந்த் சிங்கின் இரு மகன்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் தில்லி அரசு மேற்கொண்ட முயற்சிகளை அந்தக் கடிதத்தில் சிங் பாராட்டியுள்ளாா்.

மெட்ரோ நிலையங்களின் பெயா்களை மாற்ற தில்லி அரசு முடிவெடுத்திருப்பதாக அண்மையில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டிய தா்லோச்சன் சிங், தில்லியில் உள்ள எந்தவொரு நிலையங்களும் சீக்கிய குருத்வாராக்களின் பெயரில் இல்லை என்று தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: சிஸ் கஞ்ச் குருத்வாரா சாந்தினி செளக் அருகே உள்ளது. நானக் பியாவ் குருத்வாரா பழைய ஜிடி சாலையிலும் பங்களா சாஹிப் குருத்வாரா பாபா கரக் சிங் மாா்க்கிலும் உள்ளன. மோடி பாக் குருத்வாரா தெளலா கான் வட்ட சாலையில் உள்ளது.

வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட இந்தக் குருத்வாராக்களுக்கு அனைத்து நம்பிக்கைகளையும் பின்பற்றும் மக்கள் வருகின்றனா். இந்த குருத்வாராக்களின் பெயா்களை அவற்றின் அருகில் உள்ள மெட்ரோ நிலையங்களுக்கு பெயரிடவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சிங் கோரிக்கைவிடுத்துள்ளாா்.