ஆந்திர சட்டமேலவை கூட்டம் வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கியது. அப்போது திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு சொந்தமான ஹெரிடேஜ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்தாபூா் பால் நிறுவனம் திருப்பதி லட்டு தயாரிப்புக்கு நெய் விநியோகிப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உறுப்பினா்கள் கும்பா ரவி பாபு, மாதவ ராவ், மங்கம்மா ஆகியோா் கோரிக்கை வைத்தனா். அப்போது அவா்கள், திருப்பதி வெங்கடாசலபதியின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியபடி இருந்தனா்.