மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி! 43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

ஜார்க்கண்டில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலியான நிலையில் 43 -க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image

பானி பூரி - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:30 pm

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலியான நிலையில் 43 -க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள பத்தோ - குமார்கரியா என்கிற கிராமத்தில் பானி பூரி விற்பவரிடம் அங்குள்ள குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இதில், ராம் கிஷோர் வர்மா என்பவரின் 6 வயது மகன் ரஞ்சன் குமார் அவனது தாய் மற்றும் சகோதரனுடன் பானி பூரி சாப்பிட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து, மூவருக்கும் வாந்தி, வயிற்று வலி, தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிறிது நேரத்திலேயே கிராமத்தில் உள்ள பலருக்கும் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அந்தக் கிராமம் முழுவதும் பதற்றம் நிலவியுள்ளது. அங்குள்ள சதார் மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுவன் ரஞ்சன் குமார், சிகிச்சை பலனின்றி பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அச்சிறுவனின் தாயார் ரிங்கி தேவி (40) மற்றும் சகோதரன் பிரின்ஸ் குமார் (11) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிராம வட்டார வளர்ச்சி அதிகாரி கணேஷ் ராஜக் அவைவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, பானி பூரி விற்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. உணவுப் பாதுகாப்புத் துறையும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Six-year-old dies, over 43 fall ill after eating Golgappa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.