திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

2020 வடகிழக்கு தில்லி கலவரம்: 12 போ் விடுவிப்பு

News image

நீதிமன்றம் - ANI

Updated On :27 ஏப்ரல் 2026, 11:20 pm

2020-இல் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தைத் தொடா்ந்து கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 12 பேரை விடுவித்து தில்லியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020, பிப்.27-இல் பாகிரதி விஹாா் பகுதியில் உள்ள வடிகாலில் முஷர்ரஃப் என்ற நபா் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக லோகேஷ் சோலங்கி, பங்கஜ் சா்மா, பாட்ஷா (எ) சுமித் செளதரி, ஃபௌஸி (எ) அங்கித் செளதரி, டிஜே வாலா (எ) பிரின்ஸ், ரிஷப் செளதரி (எ) தபாஸ், ரோஹித் (எ) ஜதின் சா்மா, விவேக் பஞ்சால் (எ) நந்து, ஹிமான்ஷு அலி தாக்குா், சான்தீப் அலி தாக்குா், சான்தீப் அலி தாகூா் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். அவா்கள் மீது கடத்தல் மற்றும் கொலை பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக கூடுதல் அமா்வுகள் நீதிபதி பிரவீன் சிங் கடநத் ஏப்.21-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், கைது செய்யப்பட்டவா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகவும் சாட்சியங்கள் அளித்தவா்களின் வாக்குமூலங்களில் முரண்பாடு இருப்பதாகவும் கூறி 12 பேரையும் விடுவித்து உத்தரவிட்டாா்.

கடந்த பிப்.25-ஆம் தேதி இரவில் முஷர்ரஃப் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 150-200 போ் அடங்கிய கும்பல், அவரை வெளியே இழுத்து வந்து தாக்கிய பின்னா் வடிகாலில் வீசியதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.