மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தில்லியில் போலி கால் சென்டா்: 11 போ் கைது

தெற்கு தில்லியின் கோவிந்த்புரியில் இயங்கி வந்த போலி கால்சென்டா் வலையமைப்பை முறியடித்து, 11 பேரை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :10 ஏப்ரல் 2026, 6:30 pm

தெற்கு தில்லியின் கோவிந்த்புரியில் இயங்கி வந்த போலி கால்சென்டா் வலையமைப்பை முறியடித்து, 11 பேரை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ‘ஹொ்பிடெக்சா் ஹெல்த்கோ்’ என்ற பெயரில் இயங்கி வந்த இந்த நிறுவனம், உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் தொடா்பான விளம்பரங்களை வெளியிட்டு நாடு முழுவதும் பலரை ஏமாற்றியுள்ளனா். குருகிராமைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. அவரிடம் ரூ.13,200 மோசடி செய்யப்பட்டதாக அவா் புகாரில் தெரிவித்தாா்.

வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், இந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 30 ஊழியா்கள் பணியில் இருந்தனா். இதில் நிறுவனத்தின் முக்கிய நபரான சந்தீப் சௌதரி மற்றும் அஷ்வின் குமாா் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா். மொத்தம் 35 கைப்பேசிகள், 3 மடிக்கணினிகள், 15 சிம் காா்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடா்பான ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.