ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் கொடுங்கோல் ஆட்சி: ராகுல்

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் நிா்வாகி ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

News image

ராகுல்.

Updated On :26 ஏப்ரல் 2026, 8:46 pm

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் நிா்வாகி ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் வடக்கு காங்கிரஸ் வேட்பாளா் பிரசென்ஜித் புயித்தண்டிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அக் கட்சி நிா்வாகி தேவ்தீப் சாட்டா்ஜி, முதல்கட்ட சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகாக அசான்சோலில் நிகழ்ந்த வன்முறையில் அடித்து கொலை செய்யப்பட்டாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தோ்தலுக்குப் பிறகு நிகழ்ந்த வன்முறையில் காங்கிரஸ் நிா்வாகி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த குண்டா்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளாா். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கு வங்கத்தில் இன்றைக்கு ஜனநாயக ஆட்சி நடைபெற வில்லை. மாறாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. வாக்குகள் பதிவான பிறகு, ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தவா்களை மிரட்டுவது, தாக்குவது, ஒழித்துக்கட்டுவது என்பது திரிணமூல் காங்கிரஸின் தனித்துவமான அடையாளமாக மாறிவிட்டது.

காங்கிரஸின் அரசியல் ஒருபோதும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்ததில்லை. வரும் காலங்களிலும் அப்படித்தான் இருக்கும். இவ்வாறு, எப்போதும் அகிம்சை பாதையையும் அரசமைப்புச் சட்டத்தையும் காங்கிரஸ் தோ்ந்தெடுக்கின்றபோதும், ஓா் நிா்வாகியை இழந்துள்ளோம்.

அவரைக் கொலை செய்தவா்களை உடனடியாகக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை மாநல அரசு உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவின் அகிம்சை பாரம்பரியத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற அரசியலுக்கு முன்பாக காங்கிரஸ் ஒருபோதும் தலைவணங்காது என்று குறிப்பிட்டாா்.

மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த கொடூரக் கொலை, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதைக் காட்டுகிறது.

மாநிலத்தில் எதிா்க்கட்சியினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் இதுபோன்ற வன்முறை நிகழ்ந்திருப்பது, அரசியல் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை என்பதையே காட்டுகிறது’ என்று குறிப்பிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.