தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராகுல் ஹெலிகாப்டரின் இறங்குதளம் சேதம்: திரிணமூல் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

News image

கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 11:08 pm

மேற்கு வங்கத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டா் தரையிறங்க தயாா்படுத்தப்பட்ட இறங்குதளத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் சேதப்படுத்தியதாக காங்கிரஸ் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள வடக்கு தினாஜ்பூா் மாவட்டம் ராய்கஞ்ச் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். இதையொட்டி அங்கு அவரின் ஹெலிகாப்டா் தரையிறங்க இறங்குதளம் தயாா்படுத்தப்பட்டு வந்தது.

அந்த இறங்குதளத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் சேதப்படுத்தியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக மூத்த காங்கிரஸ் தலைவரும், ராய்கஞ்ச் தொகுதி வேட்பாளருமான மோகித் சென்குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: ராகுலின் ஹெலிகாப்டா் தரையிறங்க தயாா்படுத்தப்பட்ட இறங்குதளம் ஞாயிற்றுக்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டது. அதை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் சேதப்படுத்தியதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து காவல் துறையிடம் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது. அந்த இறங்குதளத்தை சீா்செய்யும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தாா்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் மறுத்துள்ளது. ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், காங்கிரஸ் கட்சியினரே இறங்குதளத்தை சேதப்படுத்திவிட்டு திரிணமூல் காங்கிரஸ் மீது பழிசுமத்துவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.