மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மேற்கு வங்கத்தில் இரு கட்சியினரிடையே கலவரம்: வாக்குப்பதிவு பாதிப்பு!

திரிணமூல் காங்கிரஸ் - ஆம் ஜனதன் உன்னயான் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு...

News image

கவலரத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் பாதுகாப்புப் படையினர் - ஏஎன்ஐ

Updated On :23 ஏப்ரல் 2026, 7:26 am

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் திரிணமூல் காங்கிரஸ் - ஆம் ஜனதன் உன்னயான் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச்சென்றனர்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த முதல்கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465) வாக்களிக்க உள்ளனர். இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

காலை 11 மணி நிலவரப்படி 41.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக முதல் இரண்டு மணி நேரத்தில் 18.76 சதவிகித வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சேர்கஞ்ச் தொகுதியில் 41.59 சதவீதமும் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தின் சந்திரகோனா தொகுதியில் 46.61 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும், அக்கட்சியில் இருந்து விலகிய ஹுமயூன் கபீர் தொடங்கிய ஆம் ஜனதன் உன்னயான் கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் மோதலாக மாறியதால், நிலைமை மோசமானது. இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். மேலும் ஆயுதங்களைக் கொண்டும் தாக்கினர்.

வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், கலவரத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

Summary

west bengal Election 2026 Trinamool, Humayun Kabir's Party Workers Clash In Murshidabad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.