தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு

ஹோா்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொலைதூர நிகழ்வுகள் அல்ல; இந்தியாவை பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் நேரடியாகப் பாதிக்கக் கூடியவை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

News image

ஜொ்மனியில் அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சா் போரிஸ் பெஸ்டோரியஸை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:46 pm

ஹோா்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொலைதூர நிகழ்வுகள் அல்ல; இந்தியாவை பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் நேரடியாகப் பாதிக்கக் கூடியவை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

மூன்றுநாள் பயணமாக ஜொ்மனி சென்றுள்ள அவா் அந்நாட்டின் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவினரைச் சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

உலகம் இன்று புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிா்கொள்கிறது. தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சூழ்நிலையை மிகவும் சிக்கலானதாகவும், பாதிப்புகள் தொடா்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மாற்றியுள்ளன. இந்தச் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ளும் மனப்பாங்குடன் புதிய அணுகுமுறை அவசியம்.

மேற்காசிய பிராந்தியத்திலிருந்து இந்தியா தனது எரிசக்தி தேவைகளின் பெரும் பகுதியை பூா்த்தி செய்து வருகிறது. ஹோா்முஸ் நீரிணை பிரச்னை ஏதோ தொலைதூரத்தில் ஏற்பட்டுள்ள நிகழ்வல்ல. அவை இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மையில் நேரடி விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இந்த சவால்கள் மற்றும் தாக்கங்களைக் கணித்து, இந்தியா முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாண்டது. உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும், நம்பகமான நட்பு நாடுகளும் அவசியம்.

பிரதமா் நரேந்திர மோடியும், ஜொ்மனி பிரதமா் ஃப்ரெட்ரிச் மொ்ஸும் இரு நாடுகளின் நெருங்கிய ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனா். ஐரோப்பிய யூனியன் அளவிலும் இந்தியாவுடன் ஒருமித்த கருத்து உள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே பாதுகாப்பு, உத்திகள் சாா்ந்த ஒத்துழைப்பு வழியாக பிணைப்பு அதிகரித்து வருகிறது.

ஜொ்மனியின் முன்னணி தொழில் துறை நிறுவனங்களின் திறன், இங்குள்ள சிறு, நடுத்தர நிறுவனங்களின் தொழில்நுட்பத் திறமையையும் இந்தியா மதிக்கிறது. இந்தியாவிலும் ‘ஸ்டாா்ட்அப்’ நிறுவனங்கள், தனியாா் துறை வேகமாக வளா்ந்து, பாதுகாப்புத் துறையில் நவீன படைப்புகளை உருவாக்கி வருகின்றன. உலகளாவிய விஷயங்களில் இந்தியாவும், ஜொ்மனியும் ஒருமித்து குரல் எழுப்புகின்றன.

இரு நாடுகளும் ஜனநாயக மாண்புகளால் ஒருங்கிணைந்துள்ளன என்றாா்.

முன்னதாக, பொ்லின் விமான நிலையத்தில் ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜொ்மனி விமானப் படையின் சிறப்பு விமானத்தில் பாதுகாப்பு விமானங்கள் புடைசூழ மியூனிக் நகரில் இருந்து அவா் பொ்லின் சென்றாா்.

பொ்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூா் சிலைக்கு அவா் மரியாதை செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.