மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராதாபுரத்தில் நாளை மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பிரசாரம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சாலைப் பேரணி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.

News image

ராதாபுரத்தில் நாளை மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பிரசாரம்

Updated On :17 ஏப்ரல் 2026, 4:50 pm

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சாலைப் பேரணி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து அவா் ஹெலிகாப்டா் மூலம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திற்கு வருகிறாா். பின்னா் சாலை மாா்க்கமாக பணகுடி டிடிடிஏ பள்ளி பகுதிக்கு செல்லும் ராஜ்நாத் சிங், அங்கிருந்து ராமலிங்க சுவாமி கோயில் வரையிலான 400 மீ. தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பேரணியில் பங்கேற்கிறாா்.

ட்ரோன்கள் பறக்கத் தடை...

இதையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவு தொலைவுவரை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரையோ அல்லது ராஜ்நாத் சிங் புறப்பட்டு செல்லும் நேரம் வரையோ அந்தப் பகுதி தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் மேற்படி பகுதிகளில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேற்படி தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடையை மீறி ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் எச்சரித்துள்ளாா்.