மேற்காசிய மோதலால் ஏற்படக்கூடிய எந்தொரு நெருக்கடியையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள கேரளத்தில் நடைபெற்ற சைனிக் சம்மான் சம்மேளனம் நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார்.
இந்தியக் கடற்படைக் கப்பல்கள் நாட்டின் எரிபொருள் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதாகவும், வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். மாநிலத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு மிகவும் பொருத்தமான அரசியல் கட்சி என்றால் அது பாஜக தான், அது மோடியின் உத்தரவாதங்களுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் பாஜகவை ஆதரித்து வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மோடியின் தலைமைத்துவம் 24 காரட் தங்கத்தைப் போன்றது, அது பலமுறை சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
மொத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4ல் வாக்குகள் எண்ணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Defence Minister Rajnath Singh on Thursday said that there is "no dearth of fuel or gas in the country" and India was ready to deal with any energy crisis resulting out of the West Asia conflict.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!

பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்! ராஜ்நாத் சிங்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம்: ராஜ்நாத் சிங்

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


