மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம்: ராஜ்நாத் சிங்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

News image

வாசுதேவநல்லூரில் ராஜ்நாத் சிங் - விடியோ க்ளிப்

Updated On :19 ஏப்ரல் 2026, 9:51 am

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் பாஜக தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இதற்குக் காரனம், முதல்வரும் அவரது மகனும்தான்.

கள்ளக்குறிச்சியில் திமுகவின் அலட்சியத்தால்தான் மக்கள் பலியாகினர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறித்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றும் வழக்கத்தை அனுமதிக்க நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டபோதிலும், கார்த்திகைத் தீபம் ஏற்றச் சென்ற பக்தர்களை தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

இங்கே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைந்ததும், கார்த்திகைத் தீபம் ஏற்றப்படும். இது உங்கள் உரிமை. இதுவே பாஜகவின் உத்தரவாதமும்கூட.

திமுகவும் காங்கிரஸும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் தடுத்து விட்டன. மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்.

திமுக எம்எல்ஏக்கள் மணற்கொள்ளை மூலம் ரூ. 5,000 சம்பாதித்துள்ளனர். மக்களுக்கான நிதியும் திமுகவினருக்கே சென்றுள்ளது. திமுகவினர் கொள்ளையடித்த ஊழல் பணத்தை மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார்.

Summary

The Chief Minister and his son are solely responsible for the deterioration of law and order in Tamil Nadu: BJP Leader Rajnath Singh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.