நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம் மேற்கொண்டது குறித்து..

News image

ராஜ்நாத் சிங் சாலைவலம் - படம்: யூடியூப்/ ராஜ்நாத் சிங்

Updated On :25 ஏப்ரல் 2026, 10:32 am

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை (ஏப்.25) சாலைவலம் மேற்கொண்டார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்ட நிலையில், முதல்கட்டமாக ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 27 அன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது.

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பாஜகவின் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்றோர் மக்களிடையே தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

முன்னதாக, பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஏப்ரல் 24) அங்குள்ள கங்கையின் கிளை நதியான ஹூக்ளி நதியில் படகுசவாரி செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ஹூக்ளி மாவட்டம், கோகாட் என்னும் பகுதியில் திரளான மக்களுக்கு நடுவில் சாலைவலம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங், “மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ​​'ஊடுருவல்காரர்கள்' வெளியேற்றப்படுவார்கள் மற்றும் 'குண்டர்கள்' சிறையில் அடைக்கப்படுவார்கள்" என்பதை வலியுறுத்திப் பேசினார்.

Summary

As election campaigning for the second phase of voting intensifies in West Bengal, the Union Defence Minister conducted a roadshow on Saturday (April 25).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.